டெல்லியில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி;

டெல்லியில் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சரத்பிரபுவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்பு அவரது மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் யாரும் கருத்து கூறாமல் இருப்பது ஏற்புடையது என்று தெரிவித்தார். அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு என்று கூறிய அவர், கட்டணம் உயர்த்தப்பட்டும் அரசுக்கு 9 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் டெல்லியில் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சரத்பிரபுவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்பு அவரது மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *