பள்ளி தாளாளர் தாக்கியதில் 7ஆம் வகுப்பு மாணவனுக்கு கை, கால்களில் காயம்…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விடுதியில் தங்கிப் படித்த 7ம் வகுப்பு மாணவனை, பள்ளி தாளாளர் அடித்து, கை, கால்களில் காயம் ….

சின்னப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த அச்சிறுவன், பள்ளிப்பாளையம் வள்ளலார் குருகுலம் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வருகிறான். கடந்த வாரம் விடுதிக்கு வந்த பள்ளி தாளாளர் ராமச்சந்திரன், விடுதி உணவகப் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த மின்விசிறி, மின் விளக்குகளை ஏன் அணைக்கவில்லை எனக் கூறி பிரம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த சிறுவனுக்கு, கைவிரல் பகுதியில் சவ்வு கிழிந்துவிட்டதாகவும், கால் மற்றும் தலையின் உள்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறுவனின் தந்தை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *