இரண்டாயிரத்து 18ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் வருகின்ற ஜனவரி மாதம் 8ம் தேதி நடைபெறவுள்ளது.
ஜனவரி மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றவுள்ளார். அதனைத்தொடர்ந்து பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறுகிறது. மேலும் இந்த கூட்டத்தின் இறுதிநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசவுள்ளார். பின்னர், மார்ச் மாதம் 2 ஆயிரத்து 18 – 19ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனிடையே ஓகி புயல் பாதிப்பு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடைபெற்ற முறைகேடு, போக்குவரத்து, மின்வாரிய ஊழியர் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளை குறித்து இந்த கூட்ட்த்தில் விவாதிக்கப்படும் என தெரியவருகிறது. இந்நிலையில் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் டிடிவி தினகரனும் முதல் முறையாக சட்டப்பேரவையில் கலந்துக்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.