சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நியூட்ரினோ திட்டத்தை கொண்டு வந்து தமிழகத்தை காவு வாங்க மத்திய அரசு துடிப்பதாக தெரிவித்தார். நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டிய வைகோ, இத்திட்டத்தால் தமிழகமே பாலைவனமாக மாறிவிடும் என்றும் கூறினார்.
2018-01-21