நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது. ஏற்கனவே நடந்த 2 ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒரு போட்டியிலும், நியூசிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி, ரன்களை குவித்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 147 ரன்கள், கேப்டன் விராத் கோலி 113 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து, 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, துவக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 50 ஓவர்கள் முடிவில் 331 ரன்களுடன் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *