நாட்டிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் அருகே பட்டினம்காத்தானில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ். மணியன், துரைக்கண்ணு, பாலகிருஷ்ணாரெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உண்மையும், அ.தி.மு.க.வின் தொண்டர்களும் தங்களுடன் இருந்ததால்தான், இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக குறிப்பிட்டார். மேலும் நாட்டிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகவும், தமிழக நலன்களுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். இதனைதொடர்ந்து ராமநாதபுரம் நகராட்சி, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பின்னர் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க ஒற்றுமையாக செயல்பட்டது போல், இனி எந்த தேர்தல் வந்தாலும் நாம் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று கூறினார்.