கடந்த வியாழக்கிழமை ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவின் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இண்டர்செப்டர் ஏவுகணை வங்கக் கடல் பகுதியில் மற்றொரு ஏவுகணையை வெற்றிகரமாக வழிமறித்து தாக்கி அழித்தது. பாகிஸ்தானின் நடுத்தர ரக ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை எதிர்கொண்டு தாக்கி அழிக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இண்டர்செப்டர் ஏவுகணைத் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ள 4-வது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. தூரத்தில் வரும் மற்றொரு ஏவுகணையை ராடார் மூலம் கண்காணித்து குறிப்பிட்ட தூரத்தில் இண்டர்செப்டர் ஏவுகணை தாக்கி அழிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
2017-12-31