தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வீடுகளில் சூழ்ந்திருக்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ABVP அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலத்திற்கு முன்னால் அக்கட்சியின் கொடியை கிழித்து, தீவைத்து கொளுத்திய அத்துமீறல் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் போக்கு என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வீடுகளில் சூழ்ந்திருக்கும் வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை காக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
மதவாத சக்திகளின் வன்முறை போக்கை கண்டித்து நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், அனைத்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.