தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 286 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 209 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்சில் 77 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 208 ரன்கள் இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 135 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தென் ஆப்ரிக்க அணியின் பிளண்டர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்க அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *