அமெரிக்காவில் பனிப்புயலால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நியூயார்க் நகரில் பனிப்பொழிவு காணப்படுவதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தரையிறங்க வரும் விமானங்கள், வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்படுகின்றன. பனிப்பொழிவு காரணமாக, ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் செல்லும் பாதையில் பனிக்கட்டிகள் உருகி தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் வடிந்து தேங்குவதால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வியாழக்கிழமை முதல் பல்வேறு விமானங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதால் ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *