துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: கனிமொழி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான மக்கள் விசாரணைக் குழு அறிக்கையை, பாதிக்கப்பட்டவா்களிடம் அர்ப்பணிக்கும் விழா தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் புகைப்படங்களுக்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோபால கௌடா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லக்கண்ணு, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் விழாவில் பேசிய திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, ஸ்டொ்லைட் பிரச்சனை குறித்தும் அதனால் போரதியதில் உயிரை தியாகம் செய்தவர்களை பற்றியும் பேசினார். மேலும் இதே போன்று எட்டு வழிச்சாலை அமைப்பது பற்றி யார் கேள்வி கேட்டாலும், கைது செய்யப்படுவதாக கூறினார். அதிலும் விசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசியவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு, நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *