தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல அக்டோபர் 15-ம்தேதி முதல் 17-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே, சென்னையில் இருந்து இயக்கப்படும் 2 ஆயிரத்து 275 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என கூறினார். சென்னை, கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், அண்ணாநகர் மேற்கு, பூந்தமல்லி, கே.கே. நகரில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சுமார் 4 ஆயிரத்து 820 சிறப்பு பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *