பெங்களூரில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் போட்டியில், வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னை, கொல்கத்தா, இந்தூர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் பெங்களூரில் நடைபெறும் 4 வது போட்டியில் இரு அணிகள் மோத உள்ளன. காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளிலிருந்து நீக்கப்பட்ட அக்சர் பட்டேல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் அவருக்கு மாற்று வீரராக செயல்பட்டு வந்த ஜடேஜா தொடரிலிருந்து விலகியுள்ளார். ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகளிலும் விளையாடாமல் உள்ள முஹம்மது சமி, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியொருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *