திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹாரம் இன்று நடைபெற உள்ளதால், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், கடற்கரையில் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. 2500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். 65 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல், மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் இன்று நடைபெறவுள்ள நிலையில், முருகப்பெருமான் கோவர்த்தனாம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *