திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை மீண்டும் உயிர் பெற்றதால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு மாயநாதபுரத்தை சேர்ந்த குழந்தைராஜ் தனது மனைவி மாயவினிதாவை பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தார். புதன்கிழமை காலை மாயவினிதாவுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தையை சோதித்து பார்த்த அரசு மருத்துவர் அது இறந்து விட்டதாக கூறி சான்றிதழ் வழங்கினார். குழந்தையின் சடலத்துடன் குழந்தைராஜ் தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு மயானத்துக்கு சென்றார். குழந்தையை அடக்கம் செய்ய அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது குழந்தை வீல் என்று அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைக்கு உயிர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைராஜ் உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரோடு உள்ள குழந்தையை இறந்து விட்டதாக சான்றளித்த அரசு மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் குழந்தைராஜின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *