உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை முதல் நாளான நேற்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி னர். குறிப்பாக கனடா, அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் உறவுகளுடன் பண்டிகையை கொண்டாடினர். இந்நிலையில், பிரிட்டன் மட்டுமல்லாது உலகமுள்ள தமிழ்ச் சமூகத்தினருக்கு அந்நாட்டு பிரதமர் தெரேசா மே பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமது வாழ்த்துச் செய்தியை வீடியோவாக வெளியிட்டுள்ள அவர், பிரிட்டன் பல்வேறு வழிகளில் வளர்ச்சியை பெற்றதற்கு தமிழ் சமூகத்தினர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர் என்றும் தமிழ் சமுகத்தினாரால் தாங்கள் பெருமையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
2018-01-15