தமிழக அரசு விழாக்களில் காவி கலாச்சாரம் அதிகரித்துள்ளது ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் புகார்

தமிழக அரசு விழாக்களில் அதிகமாக காவிகள் கலாச்சாரம் தென்படுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

உலக சமரச சன்மார்க்க அமைப்பின் முதல் மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உரையாற்றினார்.

மாநாட்டுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசியலமைப்பு சட்டத்தின் பிரதிநிதியாக புதிய ஆளுநர் செயல்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.

தமிழக அரசு விழாக்களில் அதிகமாக காவிகள் கலாச்சாரம் தென்படுகிறது என கூறிய எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், இது மத்திய அரசு, மாநில அரசின் ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவதையே காட்டுவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *