ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2017-12-24