தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது. இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தின் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என்றும் தென் தமிழகம், வட தமிழகத்தின்உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைபொறுத்தவரை நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *