தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையை பொறுத்தவரை நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அவர் கூறினார். (பைட்)

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக சென்னையில் மண்டலவாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *