கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் தெரிவித்த நடிகர் கமல் ஹாசன் அதன் துறைமுக கழிமுக பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
நடிகர் கமல் ஹாசன் எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்பகுதி மக்களை சந்தித்தும்பேசினார். அப்போது, சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். அப்போது அப்பகுதி பெண்கள் கண்ணீர் மல்க தங்கள் குறைகளை தெரிவித்தனர். கமலின் இந்த நடவடிக்கைக்கு எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் மற்றும் பொன்ராதாகிருஷ்ணன் பாரட்டு தெரிவித்தனர்.
இதனிடையே சகோதரர் திருமாவளவன் மற்றும் பொன்னார் போன்றோர் தமக்களித்த வரவேற்புக்கு நன்றி என்றும் முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் தம் ஊக்கத்தை கூட்டுகிறது என்றும் தனது டூவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் கமலஹாசனின் இந்த அதிரடி ஆய்வுக்கு பிரபல பாடகர் நித்தியநந்தனின் வடசென்னை அவலம் குறித்த பாடல் ஒன்றே காரணம் என்றே தெரிய வந்துள்ளது.