தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்றிரவு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. வண்டலூர், பெருங்களத்தூர், பம்மல், தாம்பரம், வேளச்சேரி, கிண்டி, மூலக்கடை, ஈக்காட்டுதாங்கல், போரூர், மடிப்பாக்கம், மதுரவாயல், ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், சிட்லபாக்கம், கத்திப்பாரா, வடபழனி, அசோக்நகர், கோயம்பேடு, பாடி, ஆவடி உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கூடுதலாக பெய்துள்ளது என்றும் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *