தமிழகத்தை காப்பாற்ற மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை காசிமேட்டில் நடைபெற்ற திமுக பிரச்சார கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் இக்கூட்டத்தில் பேசிய அவர், ஆர்.கே.நகரில் மருதுகணேஷ் வெற்றி பெற்றால் அது மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் வெற்றியாக அமையும் என்று கூறினார். மீனவர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், தமிழகத்தை காப்பாற்ற மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைந்தால் இத்தேசத்தை காப்பாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.