தமிழகத்தில் வரும் நாட்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வுமைய அதிகாரி பாகுலேயன் தம்பி, காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என கூறினார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் , இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், வரும் நாட்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வுமைய அதிகாரி பாகுலேயன் தம்பி கூறியுள்ளார். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *