சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வுமைய அதிகாரி பாகுலேயன் தம்பி, காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என கூறினார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் , இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், வரும் நாட்களில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வுமைய அதிகாரி பாகுலேயன் தம்பி கூறியுள்ளார். .
2017-11-06