ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற சீனாவுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *