தமிழகத்தில் முழு அடைப்பு – பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மீது தாக்குதல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் நிலையில் புதுச்சேரியிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

முழு அடைப்புப் போராட்டத்தால் புதுச்சேரி அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் முழுவதுமாக இயக்கப்படவில்லை. சென்னையில் இருந்து வந்த தமிழக அரசு விரைவுப் பேருந்து மீது நெல்லித்தோப்பு சிக்னல் அருகே மர்ம ஆட்கள் கல்வீசித் தாக்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *