மான் வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

மான் வேட்டையாடியதாக பாலிவுட் நடிகா் சல்மான்கான் உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஜோத்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. மேலும், ரூ. 10,000 அபராதம் விதித்துள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு அக்டோபா் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா் பகுதியில் “ஹம் சாத் சாத் ஹே“ ஏன்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது அக்டோபா் 1ம் தேதி இரவு நடிகா் சல்மான் கான் 2 மான்களை சுட்டுக் கொன்றதாகவும், அவருடன் துணை நடிகா்கள், நகைகள் உடனிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில், நடிகா்கள் சல்மான்கான், சைப் அலி கான், தபு, சோனாலி, பிந்த்ரே, நீலம் ஆகியோா் மீது வன உயிாின பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜோத்பூா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி கட்ட விசாரணைகள் கடந்த 28ம் தேதி ஜோத்பூா் நீதிமன்றத்தில் நிறைவு பெற்றது.

இந்த வழக்கில் நடிகா் சல்மான்கான் உள்ளிட்டோரக்கு எதிராக இன்று தீர்ப்பு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், நடிகா் சல்மான்கான் உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜோத்பூா் நகருக்கு வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *