தமிழகத்தில் அரசுப்பணிகளை ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, ஆளுநர்கள் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவரும், பிரதமரும் அறிவுறுத்தி இருப்பதாக கூறினார். ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்றால் எதற்காக கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுகின்றன என கேள்வி எழுப்பிய கிரண்பேடி, தமிழக ஆளுநருக்கு அரசுத் திட்டங்களை ஆய்வு செய்வதற்கான அதிகாரம் இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *