தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை என்றும் தமிழகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் முழுமையாக நிதி ஒதுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலுன்ற முடியாது என தாம் கூறிய கருத்துக்கு, மத்திய அரசுடன் விரிசல் என அர்த்தமில்லை என்று விளக்கமளித்தார். மேலும் டெல்டா விவசாயத்தை பாதுகாக்க 7 முதல் 10 டிஎம்சி காவிரி தண்ணீர் அவசர தேவைக்காக கேட்கப்பட்டதாகவும், தமிழகத்துக்கு நீர் தர வேண்டியது கர்நாடகத்தின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை என்றும் தமிழகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் முழுமையாக நிதி ஒதுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.