தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2017-11-10