தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் கன்னியாகுமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாகவும், அது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *