டெல்லியில் மருத்துவ மாணவர் சரத்பிரபு உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்தார். பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திய கனிமொழி, டெல்லியில் மருத்துவ மாணவர் சரத்பிரபு உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு ஹெல்ப்லைன் உருவாக்கி கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *