டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி.க்களில் மேலும் இரண்டு பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு; இரட்டை இலை சின்னத்துக்கு மதிப்பளித்து ஆதரவு தெரிவித்ததாக தகவல்

டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி.க்களில் மேலும் இரண்டு பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி.க்களான வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் செங்குட்டுவன் மற்றும் திண்டுக்கல் மக்களவை தொகுதி உறுப்பினர் உதயகுமார் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இரட்டை இலை சின்னத்திற்க்கு மதிப்பளித்து இருவரும் முதலமைச்சருக்கு ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. திங்களன்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், நவநீதகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 6 எம்.பிக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த நிலையில், 5 எம்.பிக்கள் முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையே இன்று நடைபெற இருந்த அதிமுக ஆட்சி மன்ற குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *