ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 9092390432 என்ற ஹெல்ப்லைன் வாட்ஸ் அப் எண்ணில் புகார்களை வீடியோ மற்றும் புகைப்படமாகவோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை தேர்தல் அலுவலகத்தில் வாட்ஸ் அப் மையம் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இடைத் தேர்தலை முன்னிட்டு 24 மணிநேரமும் செயல்படும் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் ஆர்.கே.நகருக்கு வரும் முக்கியப் பகுதிகளில் 6 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட வங்கிகளில் ஒரே நேரத்தில் அதிக அளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டதால் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கொடுக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.