முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.டி.பி என்படும் ஈழ மக்கள ஜனநாயகக் கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா மீது கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொலை முயற்சிக்கு உதவி புரிந்தது தொடர்பான குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த பெண்ணுக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க உத்தரவிட்டுள்ளார். 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டில் அதிகபட்சமாக 7 வருடங்களே சிறை தண்டனை வழங்கப்படவெண்டும் என்பதால் அந்த பெண் ஏறக்குறைய 14 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் நேற்று முந்தினம் விடுவிக்கப்பட்டு குடும்பத்தாருடன் இணைந்துவாழ சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
2018-01-18