ஜிஎஸ்டி வரிவிதிப்பு நல்ல யோசனை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், ஆனால் அது மோசமான முறையில் செயல்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் நடந்த காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின் பேசிய ராகுல், பணமதிப்பிழப்பு விஷயத்தை கொண்டாடும் பிரதமர் மோடி, மக்களின் உணர்வுகளையும், வலியையும் புரிந்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ஆம் தேதி மோசமான நாள் என்று குறிப்பிட்ட ராகுல், அது பேரழிவை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என இரண்டு வெடிகுண்டுகளை மோடி மக்கள் மீது வீசியதாக குறிப்பிட்ட ராகுல், ஜிஎஸ்டி என்பது நல்ல யோசனை என்றும், ஆனால் மோசமான முறையில் செயல்படுத்தப்பட்டது என்றும் கூறினார். இந்த இரு விஷயங்களால் நாட்டின் பொருளாதாரத்தையே கொன்று விட்டதாகவும் ராகுல் குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *