ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மழை பொழிவது போல் பனி பெய்து வருகிறது.

டோக்கியோவில் தற்போது கடுமையான பனிபொழிவு நிலவி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக பனி பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளைப்போர்வை போல கட்டிடங்கள், சாலைகள் என அனைத்தையும் ஆக்கிரமித்துள்ள பனியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி, பனிக்கட்டிகளை அகற்றி வந்தாலும், தொடர்ந்து பெய்யும் பனிமழையால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உடல்முழுவதையும் மூடும் வகையிலான உடைகளை அணிந்து, பொதுமக்கள் நடமாடி வருகின்றனர். வீடுகளைச் சுற்றி பனி படர்ந்துள்ளதால், வாகனங்களை எடுக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சாலைகள் மட்டுமின்றி, ரயில் தண்டவாளங்களையும் பனிக்கட்டிகள் ஆக்கிரமித்துள்ளதால், ரயில் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *