சொகுசுக் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்தது உறுதியானால் நடிகை அமலா பாலுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல திரைப்பட நடிகையான அமலா பால் பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவருக்கும் இயக்குநர் விஜய்க்கும் திருமணம் நடைபெற்று தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், தற்போது தனியாக வாழ்ந்து வரும் நடிகை அமலா பால், சென்னையில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் எஸ். கிளாஸ் பென்ஸ் கார் வாங்கினார். இந்த நிலையில், அவர் போலி முகவரி மூலம் காரை வாங்கியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரளா காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், குற்றம் உறுதியானால் அமலா பாலுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *