சேலம் போலீசாரால் விடியற்காலையில் சென்னையில் வைத்து ஆம் ஆத்மி தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கைது

சேலம் எட்டு வழி சாலை க்கு எதிராக அறிக்கையின் வாயிலாக சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்கள் வாயிலாகவும் பதினாறு பேரை வெட்டுவேன் என என அரசுக்கு எதிராக கருத்து வித்ததாக கூறி இன்று காலை தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணை ப்பாளர் வசீகரன் மதுரவாயில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்…

சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விடியற்காலையில் சென்னை அண்ணா நகர் போலீசார் உதவியோடு கைது செய்து சேலம் அழைத்து சென்றனர்…

வசீகரன் மீது காரிப்பட்டி காவல் நிலையத்தில் 28-06-2018 அன்று கிராம நிர்வாக அலுவலர் லிங்கேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ்கண்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து உள்ளனர்.

அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் அச்சுருத்தல், பொதுமக்கள் மத்தியில் போராட்டத்தை தூண்டி விடுதலை, பொது அமைதிக்கு குந்தகம், கொலைமிரட்டல் உள்ளிட்ட குற்றப்பிரிகளில் வழக்கு பதிவு செய்து சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம் மிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *