இலங்கை அரசின் அமைச்சரவையில் குழோந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கும் எங்கள் ஆருயிர் தாய் தமிழ் உறவு சகோதரி விஜயகலாவின் பேச்சு 100% உண்மையானதும், போற்றுதலுக்குரிய பேச்சாகும்.
யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமி கற்ப்பழிக்கப்பட்டு கொலைச்செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவர் சொல்லப்பட்ட கருத்தானது,
நாம் சுதந்திரமாக நம் ஊருக்குள் நடமாட வேண்டும் என்றால் ,நாமும் நம் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் வருவது தான் நிவாரணம் என்று அவர் தெரிவித்த கருத்து உலக தமிழர்களின் தனிமனித ஒழுக்கம்,இறையாண்மை, அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துததல்,உயர் நாகரீகமும் ,அறிவும், வீரமும் ,செறிந்த இந்த தமிழ் இனத்தின் ஒற்றை அடையாளமாக விடுதலை புலிகள் இயக்கம் திகழ்ந்தது என்பது சகோதரியின் பேச்சு உலகிற்கு மீண்டும் பறைசாற்றியது.
சகோதரி வியஜகலா அவர்களின் இந்த பேச்சுக்கு இந்தியாவில் வாழ்கின்ற தாய் தமிழ் உறவுகளின் பேராதரவையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.