ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதிமுக அரசை கண்டித்து, சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும், திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் எதிரே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அம்மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தலைவராகப் பொறுப்பேற்ற பின் தாம் பங்கேற்கும் முதல் போராட்டம் இது என்றும், சேலம் போராட்டக் களத்தை விருப்பப்பட்டு தேர்வு செய்ததாகவும் குறிப்பிட்டார். மத்திய-மாநில அரசுகளை கடுமையாக சாடிய அவர், மத்தியில் நடைபெறுவது மதவாத ஆட்சி என்றும், மாநிலத்தில் நடைபெறுவது அதற்கு துணைபோகும் ஊழல் ஆட்சி என்றும் குற்றம்சாட்டினார்.
இதேபோல, அதிமுக அரசைக் கண்டித்து சென்னை கந்தன்சாவடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.