இந்தியப் பங்குச்சந்தைகளில் 2வது நாளாக இன்றும் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 294 புள்ளிகள் சரிந்து 37 ஆயிரத்து 290 புள்ளிகளில் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 98 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 278 புள்ளிகளில் நிறைவடைந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, வர்த்தகப் போர், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவற்றால் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை சரிவடைந்தது. ஹிந்துஸ்தான் யூனிலீவர், யெஸ் வங்கி, விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை உயர்வடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் சரிவடைந்து 72 ரூபாய் 75 காசுகளாக இருந்தது.