செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குகளுடன் ஆதாரை இணைப்பதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

அரசின் திட்டங்கள், வங்கி கணக்குகள், செல்போன் எண்களுடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. செல்போன் எண்களை இணைக்க காலக்கெடு அடுத்த ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதியும், வங்கி கணக்குடன் இணைப்பதற்கான அவகாசத்தை மார்ச் 31 ஆம் தேதியும் மத்திய அரசு நீட்டித்தது. ஆதார் கட்டாயமாக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் ஏகே சிக்ரி, அஷோக் பூஷன் அமர்பு முன்பு வந்தது. அப்போது, ஆதாரை இணைக்கும் முடிவிற்கு இடைக்கால தடை விதிப்பது பற்றி, அரசியல் சாசன அமர்வு தான் முடிவு செய்யும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதே சமயம் ஆதாரை இணைக்காவிட்டால் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று மக்களை பயமுறுத்த வேண்டாம் எனவும் நீதிபதிகள் கண்டித்தனர். ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துமாறும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *