சென்னை அன்ணாசாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் பஸ் நிலையம் அருகே அண்ணாசலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. திடீரென உருவான பள்ளத்தை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயில் பாதைக்கான பணி நடைபெற்று வருவதால் பள்ளம் உருவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 அடி ஆழம் வரை பள்ளம் இருந்ததால் பாதுகாப்பு கருதி அந்த வழித்தடத்தில் போக்குவரத்து ஒரு வழியாக மாற்றம் செய்யப்பட்டது . அண்ணாசாலையில் உருவான பள்ளத்தை ஆய்வு செய்வதற்காக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அவர்கள் கூறுகையில் மெட்ரோ ரயில் பணி நிறைவடைந்து விட்டது. எனவே மெட்ரோ ரயில் பணியால் பள்ளம் உருவாக வாய்ப்பு குறைவு. மேலும் ஆய்வுக்கு பின்னரே பள்ளம் உருவானதற்கான காரணம் தெரிய வரும் என கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *