சென்னையில் போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு எரித்த காரணத்தால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொங்கல் தினத்திற்கு முந்தைய தினம் தமிழகம் முழுவதும் போகி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய பொருட்களை சாலையில் வைத்து தீயிட்டு கொளுத்தினர். இதனால் நகர் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில் சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் , போகி பண்டிகையால் சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *