சென்னையில் டெங்கு காய்ச்சலால் 2 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதி ; சிவகங்கை மாவட்டத்தில் காய்ச்சலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு…

தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுமார் 2 ஆயிரம் பேர் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் நோயால் நாள்தோறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுமார் 2 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 27 பேரும், நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் 8 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 82 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 170 பேர் என 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில், 150 பேர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில், 321 பேரும், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 15 பேரும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனி அரசு மருத்துவமனையில் 110 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், திருச்சி அரசு மருத்துவமனையில் 437 பேரும், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 187 பேரும், நெல்லை அரசு மருத்துவமனையில் சுமார் 275 பேரும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், திருவாரூர், நாகை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், டெங்கு காய்ச்சல் காரணமாக, தமிழகத்தில் நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்
* சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் 2,000 பேர் அனுமதி
* திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
* நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
* கோவை அரசு மருத்துவமனையில் டெங்குவால் 82 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 170 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்
* ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் 150 பேர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
* மதுரை அரசு மருத்துவமனையில் 321 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
* ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 15 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்
* தேனி அரசு மருத்துவமனையில் 110 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிக்கை பெற்று வருகின்றனர்
* திருச்சி அரசு மருத்துவமனையில் 437 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
* புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 187 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது
* நெல்லை அரசு மருத்துவமனையில் சுமார் 275 பேரும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
* தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
* திருவாரூர், நாகை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனையில் ஏராளமானோருக்கு சிகிச்சை
* டெங்கு காய்ச்சல் காரணமாக, தமிழகத்தில் மட்டும் 5 பேர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *