சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்தில் தற்போது பனிப்பொழிவும், பனிமூட்டமும் கடுமையாக உள்ளது. இந்நிலையில் ஃபுயாங் நகரில் உள்ள தேசிய விரைவு நெடுஞ்சாலை பனிப்படலத்தால் மூடப்பட்டிருந்தது. இந்த பனிமூட்டத்துக்கு இடையில் அவ்வழியாக சென்ற சுமார் 30 வாகனங்கள் ஒன்றோடொன்று வரிசையாக மோதிக்கொண்ட விபத்தில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2017-11-16