சத்தியமங்கலம் அருகே போக்குவரத்து சாலையில் இரு சிறுத்தைகள் விளையாடியது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. திம்பம் மலைப்பாதை 5 வது கொண்டைஊசி வளைவு அருகே இரு சிறுத்தைகள் நடமாடியதோடு சாலையின் நடுவே படுத்து விளையாடியபடி சண்டையிட்டன.
இதைக்கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையில் நிறுத்தியபடி செல்போனில் படம்பிடிக்க ஆர்வம் காட்டினர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகன ஓட்டிகளை சப்தமிட்டு எச்சரித்தனர். இதையடுத்து 2 சிறுத்தைகளும் வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தன.