இது தொடர்பாக சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், வி.கே.சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்று காலில் விழுந்து கூறியவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என குறிப்பிட்டார். முதலமைச்சரும், அமைச்சர்களும் தற்போது பதட்டத்தில் உள்ளதாக கூறிய அவர், முதலமைச்சராக இருப்பவர் மிரட்டுவது அழகல்ல என்றும், அமைச்சர்கள் அனைவரும் ரத்த அழுத்தம் வந்தது போல் கோபப்படுகின்றனர் எனவும் விமர்சித்தார். மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க ஏன் பயப்படுகிறார்கள் எனவும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, பெங்களூரு மடிகேரி கோயிலுக்கு சென்ற டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களிடம் தமிழக காவல்துறை விசாரணை நடத்தியது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் வாகனங்களை வழிமறித்து தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.