கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டு இருந்த மண்டபத்தில் திருமணம் நடத்தி வைத்த திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்

கைதான தலைவர்களை சென்னை புரசைவாக்கம் டவுட்டனில் தனியார் திருமண மண்டபத்தில் தொண்டர்களுடன் போலீசார் அடைத்து வைத்தனர்.. அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில் மாலையும், கழுத்துமாக மணமக்கள் இருவர் மண்டப மேடையை நோக்கி வந்தனர்.

இதனால் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட மண்டபத்தில் அடைத்துவிட்டார்களோ என தொண்டர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மணமக்களை வரவேற்று அழைத்துச் சென்றார்.

இதன் பிறகே விழுப்புரத்தை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் தொண்டருக்கு தனது கட்சி அலுவலகத்தில் திருமாவளவன் இன்று திருமணம் செய்து வைப்பதாக இருந்தது தெரியவந்தது. திருமணம் நடைபெற இருந்த நிலையில், கைது செய்யப்பட்டு கல்யாண மண்டபத்தில் இருப்பதால் மணமக்கள் அங்கு வந்திருப்பதாக ஸ்டாலினிடம் திருமாவளவன் விளக்கினார்.

இதன் பின்னர் தொண்டர்கள் கைத்தட்டல்களுக்கிடையே ஸ்டாலின் தாலி எடுத்து கொடுத்து மணமக்கள் பாரதிதாசன் – ஸ்ரீமதி திருமணத்தை நடத்தி வைத்தார். போராட்டகளத்தில் திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சியளிப்பதாக மணமக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *